VETRI TECH NEWS: ஏப்ரல் 2016
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

சனி, 30 ஏப்ரல், 2016

தி பாடிகார்ட் ஆஃப் தமிழ் சினிமா – மாஸ் மன்னன் அஜித் குமார்

இவன் உருவம் தேவையில்லை, நிழழ் தேவையில்லை இவனுடைய பெயர் போதும் நொடிப்பொழுதில் அவனது ரசிகனை உற்சாகப்படுத்த. அந்த இரண்டெழுத்து மந்திரம் தான் “தல” மூன்றெழுத்து பெயர் தான் “அஜித்”. அக்டோபர் மாதத்தின் கடைசி நாள். ஆண்டு 2013. ‘ஆரம்பம்’  ரிலீஸ். அதிகாலைக் காட்சி முடிந்து ஆரவாரமாக ரசிகர்கள் வெளிவருகிறார்கள். அவர்களுக்கு இடையே அந்த பிரபலமான தயாரிப்பாளரும்  இருந்தார். வெளியே வந்தவர் தியேட்டர் முன்பாக வைக்கப்பட்டிருந்த வானுயர  கட்டவுட்டுக்கு சல்யூட் வைத்தார். உணர்ச்சிவசப்பட்டு சத்தமாகவே சொன்னார்.

“நீ வெறும் நடிகன் இல்லேய்யா. இண்டஸ்ட்ரியோட பாடிகார்ட். காணாமப் போன  தயாரிப்பாளனைக் கண்டுபிடிச்சி, மறுபடியும் லைஃப் கொடுத்தே பாரு. நீதான்யா  ரியல் மாஸ்.”அஜீத்தின் மாஸ் இமேஜ் என்பது வெறுமனே திரையில் அவர்  காட்டும் திறமையில் மட்டுமல்ல. திரைக்கு வெளியேயான அவரது நடவடிக்கைகளிலும்  உருவானது. எதிரியாக இருந்தாலும், அவர் துயரத்தில் இருந்தால் அஜீத்தின்  மனசுக்கு தாங்காது.
அவரைப் பற்றி படுமோசமான கிசுகிசு எழுதிய  பத்திரிகையாளரின் ஆபரேஷனுக்கு யாரும் கேட்காமலேயே உரிய நேரத்தில்  மருத்துவக் கட்டணம் செலுத்தி காப்பாற்றியவர் அவர். வலக்கை கொடுப்பதை இடக்கை  அறியாத அளவுக்கு வள்ளல் தன்மை கொண்டவர். உடன் பணியாற்றும் திரைத்தொழிலாளிகளிடம் பெரிய ஹீரோ  என்கிற பந்தாவெல்லாம் காட்டாமல் பழகுபவர்.  தன்னுடைய படத்தை முதலில் ரசிகர்கள்தான் பார்க்க வேண்டும் என்பதற்காக,  அவரது படங்களுக்கு வி.ஐ.பி. காட்சிகளோ, பிரிவியூ காட்சிகளோ கூடாது என்று  கண்டிப்பாக இருப்பவர்.
பத்தொன்பது வயதில் ‘என் வீடு என் கணவர்’  திரைப்படத்தில் பள்ளி மாணவராக அட்மாஸ்ஃபியருக்கு வந்து போனபோது, அவரே  நினைத்திருக்க மாட்டார், மிகப்பெரிய இடத்தை இதே தமிழ் சினிமாவில் தான்  பெறப்போவதை.பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட அஜீத்குமாருக்கு மோட்டார்  பைக்கின் ‘விர்ரூம் விர்ரூம்’ சப்தம் மீது அத்தனை ஈர்ப்பு. ஆரம்பத்தில்  மெக்கானிக், பிறகு தொழில்முறை பைக் பந்தயக்காரர் என்று தன் லட்சியத்தை  நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென சினிமா குறுக்கிட்டது.
எம்.ஜி.ஆர், அமிதாப், ரஜினி, கமல் என்று அவரது ஆதர்சமான ஹீரோக்களின் துறையிலேயே  பணிபுரிய வாய்ப்பு என்கிறபோது, அதை மறுக்க மனமில்லை. துரதிருஷ்டவசமாக அவர்  ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தெலுங்குப் படத்தின் இயக்குநர் திடீரென காலமாக, அஜீத்தின் திரைப்பிரவேசம் தள்ளிப் போனது. தொடர்ச்சியாக  விளம்பரங்களில் மாடலாகப் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் 1992ல் தன்னுடைய  21வது வயதில் ‘பிரேம புஸ்தகம்’ என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.
அஜீத், முதலும் கடைசியுமாக நடித்த தெலுங்குப்படம் அது மட்டுமே. ஆனால், அவர் இரண்டாவதாக நடித்த தமிழ்ப்படமான ‘அமராவதி’தான் முதலில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் அவர் சொந்தக்குரலில் பேசவில்லை. அவருக்கு குரல்  கொடுத்தவர் விக்ரம். அமராவதிக்காக அஜீத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ்  தொகை ரூ.390/-.
அடுத்தடுத்து ‘பாசமலர்கள்’, ‘பவித்ரா’ என்று அவர்  படங்கள் நடிக்கத் தொடங்கினாலும், திடீர் பைக் விபத்தின் காரணமாக அவை தாமதமாயின. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள், முதுகில் ஏற்பட்ட காயத்தின்  காரணமாக படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது. மீண்டும் மும்முரமாக  படப்பிடிப்புக்கு வந்தவர் ஏற்றுக்கொண்ட படங்களை மடமடவென்று நடித்துக்  கொடுத்தார். விஜய் ஹீரோவாக நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில்  சிறுவேடத்தை ஏற்று நடித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யோடு மீண்டும்  ‘நேருக்கு நேர்’ படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தபோது, சில  காரணங்களால் அது நிறைவேறாமல் போனது.
1995ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில்  வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட ‘ஆசை’தான் அஜீத்துக்கு நட்சத்திர அந்தஸ்தைப்  பெற்றுக் கொடுத்தது. “இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஹீரோயினை ஃபாலோ  செய்து, லவ் புரபோஸ் செய்துகொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்று அப்போது  கேட்கப்பட்ட கேள்விக்கு அஜீத் சொன்ன பதில், அவருடைய தன்னம்பிக்கையை  வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
“இப்போ, நான் மத்தவங்க கிட்டே சான்ஸ்  கேட்கிற நிலைமையில் இருக்கேன். அதனாலே அவங்க சொல்ற கேரக்டரில்தான் நடிக்க வேண்டியிருக்கு. ஒரு காலம் வரும். அப்போ, அஜீத்தான் நம்ம படத்துலே  நடிக்கணும்னு கேட்டு வருவாங்க. அப்போ, நான் விரும்பற கேரக்டர்களில்  நடிப்பேன்.”
அந்தக் காலம் அடுத்த ஆண்டே வந்தது. அகத்தியனின் ‘காதல்  கோட்டை’, அஜீத்துக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே பெரும் ஏற்றமாக  அமைந்தது. அமிதாப்பச்சன் தமிழில் படம் தயாரிக்க முன்வந்தபோது, அஜீத்தைத்தான்  நடிக்க வைக்க விரும்பினார். அந்தப் படம் ‘உல்லாசம்’. இந்தப் படத்தில்தான்  முதன்முதலாக அஜீத்துடைய சம்பளம் பத்து லட்சத்தைத் தொட்டது. இந்தப் படத்தில்  அஜீத்துக்கு ஒரு பாடலில் கமல்ஹாசன் பின்னணி பாடியிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.
இதன்பிறகு வணிக வெற்றி தோல்விகள் மேடும் பள்ளமுமாக  மாற்றி மாற்றி அஜீத், ஸ்டெடியாக முன்னேறிக் கொண்டிருந்தார். ‘காதல்  மன்னன்’, ‘அவள் வருவாளா’, ‘வாலி’, ‘அமர்க்களம்’ என்று ஹீரோக்களின் ஹிட் லிஸ்ட்டில் தவிர்க்க முடியாத இடத்தை எட்டினார். ‘அமர்க்களம்’ நாயகி ஷாலினியைக்  காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்தோடு கரம்பிடித்தார்.
திருமணத்துக்கு  முன்பான அஜீத் நிறைய உணர்ச்சிவசப்படுவார். பத்திரிகையாளர்களிடம்  வெள்ளந்தித்தனமாக அனைத்தையும் அப்படியே கொட்டிவிடுவார். இதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் பல. ஷாலினி, தன் கணவர் அஜீத்தை முற்றிலுமாக  மாற்றிவிட்டார். ஒரு தனி மனிதராக மிகத் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடியவராக  இன்று அஜீத் மாறியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் தனக்கு இனி ரசிகர் மன்றமே  தேவையில்லை என்று அவர் அறிவித்தபோது, இனி அஜீத் அவ்வளவுதான் என்று அனைவரும்  பேசினார்கள். ஆனால், தன் ரசிகர்களை சமூகத்துக்கு நற்பணி செய்யக்கூடிய  தொண்டர்களாக மாற்றி இன்றும் தன் மாஸ் லெவலை அப்படியே தக்கவைத்துக்  கொண்டிருக்கிறார்.
இரண்டாயிரங்களின் துவக்கத்தில் அஜீத்தின்  திரைவாழ்வில் ஏற்பட்ட சரிவுகளை ‘தீனா’ சரிக்கட்டியது. அதுவரை அல்டிமேட்  ஸ்டாராகவும், ஆணழகன் அஜீத்குமாராகவும் இருந்தவரை ‘தல’ ஆக்கியது. அடுத்து ‘வில்லன்’, ‘வரலாறு’ படங்கள் மூலமாக தன்னுடைய நடிப்புத்திறமையையும்  அழுத்தமாகப் பதியவைத்தார். ‘பில்லா’வுக்குப் பிறகு பாக்ஸ் ஆபீஸ் டானாக  மாறினார்.
‘மங்காத்தா’ அவரை சிகரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அவரை ஓப்பனிங் கிங் என்று வர்ணிக்கிறார்கள். திரையுலகில் வெறும் வெற்றியை  மட்டுமே ருசித்துக் கொண்டிருப்பவர்கள் உச்சத்துக்குப் போவதில்லை.  அவ்வப்போது தோல்விகளாலும் புடம் போடப்படுபவர்கள்தான் நீண்டகாலத்துக்கு  ஜொலிக்கிறார்கள்.
இன்று அஜீத் படம் வெளிவருகிறது என்றால் ரசிகர்கள்  மட்டுமின்றி திரைத்துறையே விழாக்கோலம் பூணுகிறது. “அஜீத் படத்தில் ஒரே ஒரு  காட்சியிலாவது என் முகம் தெரிந்தால் போதும்” என்று நடிகர்கள்  சொல்கிறார்கள். தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு அவரது படங்களில்  பணியாற்றுகிறார்கள். தியேட்டர்களில் கல்லாப்பெட்டி நிரம்புகிறது.  வினியோகஸ்தர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.இது போதாதா?

Posted By: vetrivelnews on சனி, 30 ஏப்ரல், 2016

வியாழன், 28 ஏப்ரல், 2016

குழந்தைகள் கோடை கால விடுமுறைகளை கழிக்க பயனுள்ள வெப்சைட்கள்


குழந்தைகளுக்கு எல்லாம் லீவு விட்டிருப்பாங்க.. இந்த கடுமையான வெயில் காலத்துல எங்கேயும் ஸ்பெஷல் கிளாஸ் அனுப்ப முடியாது. அந்தளவுக்கு வெயில் கொடுமை. ஆனால் பிள்ளைகளை வீட்ல வச்சுகிட்டு கண்ட்ரோல் பன்றதும் சிரமமமாக இருக்கும்.

வருஷம் பூரா பள்ளி கூடத்துக்கு போய்ட்டு வந்த பிள்ளைங்க, இந்த 2 மாசத்துல சுதந்திரமா சுத்தி திரிவாங்க. அவங்களை கட்டுப்படுத்தறது ரொம்ப சிரமம்.

ஆனால் 2 மாசத்தையும் ஏதாவது பயனுள்ள வகையில் அவங்களுக்கு மாத்தி கொடுக்கிறது பெற்றோரோட கடமை இல்லையா? அதுக்கு என்ன செய்யலாம்...?

அவங்களுக்கு உபயோகமான புத்தகங்கள் வாங்கி படிக்க கொடுக்கலாம். அவங்களாகவே கத்துக்கிற மாதிரி ஒரு சில டெக்னிக்குகள் இருக்கிற பொம்மைகள் வாங்கி தரலாம். இதைவிட்டா, எங்காவது குளு குளு ஊட்டி மாதிரியான இடங்களுக்கு அழைத்து செல்லலாம்..

மாமா வீடு, அத்தைவீடு ன்னு இல்லாம வெயில் குறைவாக இருக்கிற கிராமத்து பக்கம் இருக்கிற சொந்தக் காரங்க வீட்டுக்கு - தோட்டத்துக்கு போய்ட்டு வரலாம்..

இப்படி ஏதாவது வித்தியாசமா செய்யலாம்..

வேற எங்கேயும் போக முடியாது. வீட்டோடதான்...னு இருக்கிற பசங்களுக்கு இணையத்துல இருக்கிற யூஸ்புல்லான வெப்சைட்களை அறிமுகபடுத்தலாம்.

குழந்தைகள்னாலே அவங்களுக்கு கார்ட்டூன் படங்கள் அதிகம் பிடிக்கும். இப்போ இருக்கிற குழந்தைகள் "சோட்டா பீம்" பார்க்கிறது அதிகமாகிட்டே போகுது.

சுட்டி டி.வி மாதிரியான குழந்தைகளுக்கான டி.வி. சேனல்களே கதியாக கிடப்பாங்க....

அதுக்கு மாற்றா இன்டர்நெட்ல நிறைய கார்ட்டூன் சேனல்ஸ், வெப்சைட்ஸ் இருக்கு. அதை அறிமுகப்படுத்தலாம்.

எனக்குத் தெரிஞ்சி ஒரு அற்புதமான கார்ட்டூன் வெப்சைட் இருக்கு. Kideos.com. இது "கிட்ஸ்"க்காகவே உருவாக்கப்பட்ட இணையத்தளம். இதுல ஏகப்பட்ட வித்தியாசமான கார்ட்டூன் படங்கள், கிராபிக்ஸ் படங்கள் இருக்கு. கண்டிப்பா உங்க குழந்தைக்கும் பிடிக்கும்.

வலைத்தள முகவரி: http://www.kideos.com/#/

இந்த வெப்சைட்டோட ஸ்பெஷலே இதுல Parental Control செட்டிங்ஸ் இருக்கிறதுதான். இந்த வெப்சைட்டை எவ்வளவு நேரம் பார்க்கலாம்னு நாம கன்ட்ரோல் பண்ண முடியும். அது மட்டுமில்லாம எத்தனை வயசுக்குரியவர் பார்க்கணும்னு செட்டிங்ஸ் அமைச்சுக்க முடியும்.

அப்புறம் இந்த வெப்சைட்ல நிறைய வெப்சைட் லிஸ்ட் கொடுத்திருக்காங்க. எல்லாமே குழந்தைகளுக்கானதுதான். (கீழ லிங்க் இருக்கு பாருங்க)

Useful Websites Lists for Kids

கீழ இருக்கற லிங்க்ல கூட  Top 25 வெப்சைட்டை லிஸ்ட் பண்ணி கொடுத்திருக்காங்க. எல்லாமே குழந்தைகளுக்கானதுதான்.
Top 25 Website Links for Kids


அதே மாதிரி இந்த வெப்சைட்ல கூட 10 பெஸ்ட் லிஸ்ட் கொடுத்திருக்காங்க. 
Top 10 Best Educational Websites for Kids

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on வியாழன், 28 ஏப்ரல், 2016

விசில் அடிங்க மொபைலை கண்டுபிடிங்க. பிரிமியம் அப்ளிகேஷன்



உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை எங்காவது மறந்து வைத்து விட்டீர்களா? அல்லது பொது இடத்தில் சற்று முன் திருடப்பட்டு விட்டதா? கவலை வேண்டாம் விசில் அடிங்க பதிலுக்கு உங்கள் மொபைலும் விசில் அடித்து மொபைல் இருக்கும் இடத்தை காட்டி கொடுக்கும், உங்கள் மொபைல் சைலன்ட்ல போட்டு இருந்தாலும் சப்தமாக விசில் அடிக்கும். இந்த அப்ளிகேஷன் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.




ஆஸ்ட்ரியாவில் கோட்னிக் நிறுவனத்தின் அப்ளிகேஷன் Whistle Android Finder PRO. இது வெளிவந்த ஒரே மாதத்தில் 7,00,000 பேர்க்கு மேல் டவுன்லோட் செய்து பயன்படுத்தி தொடங்கினார்கள், இப்ப 20,00,000 மேற்ப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மொபைலை ரூமில் வைத்து மறந்து விட்டாலோ அல்லது வெளியில் தவற விட்டாலோ மொபைலை கண்டுபிடிக்க ஒரு விசில் அடித்தால் போதும் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலிலில் இருந்து விசில் சத்தம் அல்லது பாட்டு சத்தம் வரும். 25க்கும் மேற்பட்ட பாடல்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். 



எப்படி செட்டிங்ஸ் செய்வது என்பதை கீழே படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.




கீழே டவுன்லோட் பட்டனை அழுத்தி புதிய பதிப்பான Whistle Android Finder PRO 5.6 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.



மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

புதன், 27 ஏப்ரல், 2016

வாட்ஸ்அப் மூலம் செயலிகள், மைக்ரோசாப்ட் ஆவணங்கள் உட்பட எந்த ஒன்றையும் பகிர்வது எப்படி?

வாட்ஸ்அப் மூலம் குரல் பதிவுகள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் போன்றவற்றை ஏனையவர்களுடன் மிக இலகுவாக பகிர்ந்துகொள்ள முடியும்.

அத்துடன்வாட்ஸ்அப் மூலம் பி.டி.எப் (PDF) ஆவணங்களை பகிர்வதற்கான வசதி யும்  அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

என்றாலும் நாம் நினைத்த அனைத்து கோப்புக்களையும் வாட்ஸ்அப் மூலம் பகிர்வதற்கான உத்தியோகபூர்வ வசதிகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

வாட்ஸ் டூல்ஸ் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்பலாம்.

எனினும் வாட்ஸ் டூல்ஸ் எனும் செயலியை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு செயலிகள், மைக்ரோசாப்ட் ஆவணகள் உட்பட நீங்கள் நினைக்கும் எந்த ஒரு கோப்பையும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

வாட்ஸ் டூல்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி?

கீழே வழங்கப்பட்டுள்ள இணையச் சுட்டி மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்க


பின்னர் Settings > Accessibility பகுதியின் மூலம் வாட்ஸ் டூல்ஸ் செயலிக்கான Service எனும் வசதியை செயற்படுத்திக்கொள்ள வேண்டும். (வாட்ஸ் டூல்ஸ் செயலியை நீங்கள் முதன் முதலாக திறக்கும் போது இதனை செயற்படுத்திக் கொள்வதற்கான அறிவுறுத்தல்கள் உங்களுக்கு தோன்றும்)

நீங்கள் அனுப்பும் கோப்புக்கள் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கில் சேமிக்கப்பட்டு அதன் மூலமே அனுப்பப்படுவதால் வாட்ஸ் டூல்ஸ் செயலியுடன் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கை தொடர்புபடுத்த வேண்டும். (வாட்ஸ் டூல்ஸ் செயலியை முதன் முதலாக திறக்கும் போது இதனை மேற்கொள்ளலாம், அல்லது வாட்ஸ்அப் மூலம் கோப்புக்களை இணைக்கும்போதும் இதனை மேற்கொள்ள முடியும்)

இனி வாட்ஸ்அப் செயலியை திறந்து நீங்கள் கோப்புகளை அனுப்ப விரும்பும் நபரை தெரிவு செய்க.

அடுத்து Attachment குறியீட்டை சுட்டிய பின் கோப்புக்களை இணைப்பதற்கான புதியதொரு சாளரம் (Window) வாட்ஸ்அப் சேவையில் திறக்கப்படுவதை அவதானிப்பீர்கள்.

பின் குறிப்பிட்ட சாளரத்தின் மூலம் அனுப்ப வேண்டிய கோப்புக்களை தெரிவு செய்து குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்.

அதனை பெறுபவர் வாட்ஸ் டூல்ஸ் செயலியை நிறுவியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர் வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொண்ட இணைப்பை ஏதாவது ஒரு இணைய பயன்படுத்தி திறந்தாலே போதும் அதனை அவரால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.

அவ்வளவுதான்!

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology


Posted By: vetrivelnews on புதன், 27 ஏப்ரல், 2016

இந்திய விலையில் வெறும் 888 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் Docoss X1 ஸ்மார்ட் போன்

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களை குறிப்பிட்டளவான ஒரு சில பணக்காரர்களின் கைகளில் மட்டுமே காணக்கூடியதாய் இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், ஸ்மார்ட் போன் என்றாலே அதிகளவான விலை கொண்டதாக காணப்பட்டமையே. ஆனால் இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் நியாயமான விலையில் சிறந்த வசதிகளுடனும் அறிமுகமாகுவதால், அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஸ்மார்ட் போன்கள் புழக்கத்தில் இருப்பதை காணலாம்.

நியாயமான விலையில் அறிமுகமாகி கொண்டு இருந்த ஸ்மார்ட் போன்கள் சீனா நாட்டின் ஸ்மார்ட் போன் தயாரிப்புக்களால் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க துவங்கியது. உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் மீதான ஈடுபாடு இப்படி சென்றுகொண்டிருக்க இந்திய நாட்டில் நம்ப முடியாத விலையில் உலகின் அதிகுறைந்த விலையுடைய ஸ்மார்ட் போன் என்ற பெயருடன் ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ரிங்கிங் பெல் நிறுவனத்தின் ப்ரீடம் 251 எனப்படும் ஸ்மார்ட் போன் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலே மற்றுமொரு ஸ்மார்ட் போன் அதிகுறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கிறது. வெறும் 888 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் போன் Docoss X1 என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் Docoss-இன் அதிகாரபூர்வ தலத்திற்கு சென்று நீங்களும் Docoss X1 போன் ஒன்றை முன்பதிவு செய்து கொல்ள முடியும்.
மேலும் SMS ஒன்றை அனுப்பி கூட இந்த புதிய ஸ்மார்ட் போனை உங்களால் முன்பதிவு செய்து கொள்ள முடியும். SMS அனுப்பும் முறை மற்றும் மேலதிக விபரங்களை குறித்த அதிகாரபூர்வ தலத்தில் தெரிந்து கொள்ளலாம்.

888 ரூபாய்க்கு அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் போன் தரும் வசதிகள் என்ன என்று பார்ப்போம்.

Dual-Core Cortex A7 1.2GHz ப்ரோசெசர்
ஆன்ராயிடு கிட்கட் இயங்குதளம்
4 இன்ச் திரை அளவு
1GB ரேம்
0.3MP முன்பக்க கேமரா
2.0MP பின்பக்க கேமரா
4GB இன்டெர்னல் மெமரி (32GB வரை அதிகரித்து கொள்ள முடியும்)
இரண்டு சிம்
2G, 3G மற்றும் வைபை வசதி

ஆகவே அதிகுறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் 
போனை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால்  இங்கே கிளிக் செய்து நேரடியாக அல்லது SMS மூலமாக முன்பதிவுகளை செய்து கொள்ள முடியும்.
மேலும் முன்பதிவு செய்த இரண்டு வாரங்களுக்குள் போன் டிலிவரி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கபடிக்கிறது.

ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் முன்பதிவின் போது ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, Docoss X1 ஸ்மார்ட் போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், போன் டிலிவரி செய்யப்படும் போது பணம் செலுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது Docoss நிறுவனம்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்






இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

திங்கள், 25 ஏப்ரல், 2016

மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் காணப்படும் 2G, E, 3G, H, H+ – இவற்றை பற்றி தெரியவேண்டாமா?

நம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1). “2G” இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.

இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

2). “E” இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும். இந்த “E” பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

3). “3G” இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.

4). Symbol “H” இது 3G மொபைல் இன்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

5). “H+” இதுவும் 3G மொபைல் இன்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

6). “4G” இச்சேவை 3G network internet – LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.


மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on திங்கள், 25 ஏப்ரல், 2016

போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா? போன் இருக்கும் இடத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட் போன்களுக்கான சிறந்த பல பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்தி வரும் டெக் இன் தமிழ் தளத்தில், இன்று ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கான சிறந்ததொரு பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயத்தை அறிமுகப்படுத்த போகிறேன்.

இன்றைய கால கட்டத்தில் திருட்டு என்பது தலைவிரித்தாடக்கூடிய ஒரு விடயமாக மாறி விட்டது. நாம் போருந்துகளில் செல்லும் போது, அல்லது பொது இடங்களுக்கு செல்லும் என்று எமக்கு தெரியாமலேயே எம்முடைய பொருட்களை திருடி விடுகிறார்கள். இதிலும் குறிப்பாக மொபைல் போன் திருட்டு இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படுகிறது.

திருடர்கள் ஒரு பக்கம் இருக்க எமது கவனயீனம் காரணமாகவும் இன்று ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போகின்றன சந்தர்ப்பங்களும் அதிகம்.

ஆகவே எமது இன்றைய பதிவில் இந்த மொபைல் போன் திருட்டு போனால் அல்லது தொலைந்து போனால் மிக இலகுவான முறையில் கண்டு பிடித்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.


ஸ்மார்ட் போன்களுக்கான பல்வேறு ட்ரேகிங் செயலிகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றிலே ஒரு சில செயலிகள் மட்டுமே தமது வேலையை சரி வர செய்து முடிக்கின்றன.

ஆகவே இன்றைய பதிவில் அவ்வாறான சிறந்ததொரு (ஆன்ராயிடு போனுக்கு) பாதுகாப்பு செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

என்டி தேப் எனப்படும் செயலி உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் பட்ச்சத்தில் யாராவது உங்களது போனை திருடி அன்லாக் செய்ய முயற்சித்தால் உங்களது போன் முன்பக்க கேமரா மூலம் குறித்த நபரை போட்டோ எடுப்பதோடு அவர் இருக்கும் இடத்தையும் லோகேசன் செர்வீஸ் மூலம் கண்டுபிடித்து உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடும்.

குறிப்பு

பொதுவாக அனைவரும் போன் ஒன்றை தங்களது முகத்திற்கு நேராக வைத்து தான் அன்லோக் செய்வார்கள். ஆகவே கண்டிப்பாக அவர்களது முகம் போட்டோ எடுக்கபடுவதட்கான வாய்ப்பு அதிகம்.

மேலும் லோகேசன் விபரம் தெரிய வேண்டும் என்றால் உங்களது போனில் லோகேசன் செர்வீஸ் செயற்பாட்டில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி..! இந்த செயலியை எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் நிறுவி எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ட்ரெகிங் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, எக்டிவ் என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து எத்தனை முறை பிழையான கடவுச்சொல்லை வழங்கிய பின் போட்டோ எடுக்க வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து குறித்த போட்டோ மற்றும் இடத்தின் விபரங்கள் எந்த மின்னஞ்சல் கணக்கிற்கு வர வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.

அவ்வளவு தான்..! இப்போது உங்களது போனில் என்டி தேப் செயலி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இப்போது நீங்களே ஒரு சில முறைகள் போனை அனலாக் செய்வதற்கான கடவுச்சொல்லை பிழையாக டைப் செய்தால், உங்களை போட்டோ எடுத்து உங்களது லோகேசன் விபரங்களுடன் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி விடும்.
ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களில் இன்றைய கால கட்டத்தில் கட்டாயமாக இருக்க வேண்டிய இந்த என்டி தேப்ஐ கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிக விளம்பரங்களும் குறிப்பிட்ட வசதிகளுமே உண்டு. ஆகவே இந்த செயலியின் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக பெறுவது என்று பார்ப்போம்.
ஆகவே இந்த  கிளிக் செய்து செல்லுங்கள்.



மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்





இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

 

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl